search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சவாரிக்கு காரை முன்பதிவு செய்து டிரைவர்களிடம் பணம் பறித்த போலி டாக்டர் கைது
    X

    சவாரிக்கு காரை முன்பதிவு செய்து டிரைவர்களிடம் பணம் பறித்த போலி டாக்டர் கைது

    • மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டரை நேற்று இரவு தி.நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் போலீசார் கைது செய்தனர்.
    • ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் போல நடித்து சிகிச்சைக்கு வந்த நபரிடம் 6பவுன் நகை மற்றும் பணத்தை சுருட்டி தப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

    போரூர்:

    சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் தான் டாக்டர் என்று கூறி கடந்த 8-ந்தேதி திருப்பதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை முன்பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து டிரைவர் தினேஷ்குமார் என்பவர் காருடன் கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்து அந்த டிப்-டாப் நபரை காரில் அழைத்து சென்றார். அப்போது கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை உள்ளது.மதுகுடித்துவிட்டு செல்லலாம் என்று கூறி டிரைவர் தினேஷ்குமாரை ஓட்டலில் உள்ள மதுபாருக்கு அழைத்து சென்றார். அங்கு நூதன முறையில் தினேஷ்குமாரிடம் இருந்து கூகுள்பே மூலம் ரூ.8 ஆயிரம் பணத்தை பெற்று அவரது செல்போனையும் டிப்-டாப் நபர் எடுத்து தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து டிரைவர் தினேஷ்குமார் கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். தி.நகர் உதவி கமிஷனர் பாரதிராஜா, கோடம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் ஓட்டல் பாரில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலி டாக்டர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டரை நேற்று இரவு தி.நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சஞ்சய் வர்மா என்பதும் டாக்டர் போல நடித்து டிராவல்ஸ் நிறுவனங்களில் கார்களை முன்பதிவு செய்து டிரைவர்களை குறிவைத்து பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து வருவதும் தெரியவந்தது.

    அவரிடம் ஏராளமான போலி அடையாள அட்டைகள் இருந்தன. ஒரு ஆதார் கார்டில் கேரளாமாநிலம் கண்ணூர் என்ற முகவரி இருந்தது. இதேபோல் போலி டாக்டர் சஞ்சய் வர்மா கடந்த மாதம் 29-ந் கார் டிரைவர் ஒருவரிடம் நூதன முறையில் ரூ.9ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு கள்ளநோட்டுகளை கொடுத்து தப்பி இருந்தார்.

    மேலும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் போல நடித்து சிகிச்சைக்கு வந்த நபரிடம் 6பவுன் நகை மற்றும் பணத்தை சுருட்டி தப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் ஏராளமனோரிடம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×