என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது
- மாமண்டூரில் உள்ள தனியார் கட்டிடத்தில், சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த செங்கல்பட்டை சேர்ந்த பவுல் ஸ்டாலின் ஜெபக்குமார், ராஜி உள்பட 30 பேரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மாமண்டூரில் உள்ள தனியார் கட்டிடத்தில், சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப், உத்தரவின் பேரில், செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் மேற்பார்வையில், படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி தலைமையில், தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள் அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த செங்கல்பட்டை சேர்ந்த பவுல் ஸ்டாலின் ஜெபக்குமார் (35) மற்றும் ராஜி (40) உள்பட 30 பேரை கைது செய்தனர், மேலும் சோதனையில் சூதாட்டத்திற்கு வைத்திருந்த ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






