search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள்
    X

    தருமபுரியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள்

    • போராட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    • மாவட்டத்தில் உள்ள 64 கிளைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி:

    தமிழகத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை கடந்த 36 மாதங்கள் ஆகியும் நிறைவேறாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாளை வரை நடைபெறுகிறது.

    இந்த வேலை நிறுத்தத்தையொட்டி இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கேரளா மாநிலம் போல் தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கிட வேண்டும், கடந்த 8 ஆண்டுகளாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வெளியிடாத முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும், நெல்லை, சிவகங்கை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு கடந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிகுதி 5 சதவீத உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 64 கிளைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×