என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவியின் கழுத்தை அறுத்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது
- வீட்டில் இருந்த சுபிதாவிடம், ஜெயராஜ் தகராறு செய்தார்.
- ஜெயராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அனந்த நகர் காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 49). ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர். இவரது மனைவி சுபிதா (39). இவர்களுக்கு ஒரு மகளும் 2 மகன்களும் உள்ளனர்.
கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி மீதான சந்தேகத்தால் அவ்வப்போது ஜெயராஜ் மனைவியை கொன்று விடுவதாக மிரட்டி வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த சுபிதாவிடம், ஜெயராஜ் தகராறு செய்தார்.
குடிபோதையில் இருந்த அவர் திடீரென கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். இதையடுத்து அவருக்கு ரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்த சுபிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் ஜெயராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






