என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்ஸ் மோதி மூதாட்டி பலி
- ஆம்புலன்ஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரகடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள்(வயது 70). நேற்று இவர், ஒரகடம் அடுத்த பண்ரூட்டி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
இதற்காக ஆஸ்பத்திரி எதிரே வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக 108 ஆம்புலன்ஸ் மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி நாகம்மாள், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






