search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூர் பகுதியில் லாரிகளை திருடி பாகங்களை பிரித்து விற்ற கும்பல் கைது
    X

    அம்பத்தூர் பகுதியில் லாரிகளை திருடி பாகங்களை பிரித்து விற்ற கும்பல் கைது

    • அம்பத்தூர் பகுதியில் இதுவரை 8 லாரிகளை திருடி இருப்பது தெரியவந்தது.
    • ஜாபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    அம்பத்தூர்:

    திருமுல்லைவாயல், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரூபன். இவருக்கு சொந்தமான லாரி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனி முன்பு நிறுத்தப்பட்டு இருந்த போது மாயமானது.

    இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரித்தபோது பூந்தமல்லியில் உள்ள லாரிக்கு பாடி பிட்டிங் செய்யும் இடத்தில் மாயமான லாரி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கிருந்த சத்தியமூர்த்தி, கங்கா ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி லாரியை திருடிய ஜாபர் என்பவரும் பிடிபட்டார்.

    விசாரணையில் ஜாபர் கூறும்போது, தான் வால்வோ பஸ் வைத்து தொழில் செய்ததாகவும் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அந்த பஸ்சை விற்று விட்டு லாரிகளை திருடி அதன் பாகங்களை பிரித்து விற்று வந்ததாகவும் தெரிவித்தார்.

    போலீசில் சிக்காமல் இருக்க ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாத 2008-ம் ஆண்டுக்கு முந்தைய பழைய வாகனங்களை திருடியதாக கூறி உள்ளார். அவர்கள் அம்பத்தூர் பகுதியில் இதுவரை 8 லாரிகளை திருடி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜாபர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×