என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்பத்தூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
- தண்டையார்பேட்டை, நேரு நகரை சேர்ந்தவர் கமல்ராஜ்.
- கடந்த 16-ந்தேதி கம்பெனி முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது.
அம்பத்தூர்:
தண்டையார்பேட்டை, நேரு நகரை சேர்ந்தவர் கமல்ராஜ். இவர் அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 16-ந்தேதி கம்பெனி முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது.
இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் பதுங்கி இருந்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியை சேர்ந்த லோகேஷ், குளக்கரை பகுதியை சேர்ந்த சோனு ஆகிய2 பேரை இன்ஸ்பெக்டர் அலமேலு, சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






