என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்பையில் காதல் திருமணம் செய்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
- கணவன்-மனைவிக்கிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
- தென்காசி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆத்தியடி தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகன் சரவணன் (வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு இளம்பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் சென்னையில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். எனினும் கணவன்-மனைவிக்கிடையே நடந்த தகராறு காரணமாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை அம்பை ரெயில் கேட் அருகே நின்று கொண்டிருந்த சரவணன் அவ்வழியாக சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்ததும் தென்காசி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தென்காசி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






