search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    X

    அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    • கொலை தொடர்பாக மேற்கு பொத்தேரி பகுதியை சேர்ந்த சுரேஷ், கந்தன், ஜெயச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
    • தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கைதானவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் உத்தரவிட்டார்.

    வண்டலூர்:

    மறைமலைநகர், மேற்கு பொத்தேரியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(22). அ.தி.மு.க.பிரமுகர். இவரை கடந்த 2 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தனர்.

    இந்த கொலை தொடர்பாக மேற்கு பொத்தேரி பகுதியை சேர்ந்த சுரேஷ், கந்தன், ஜெயச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சுரேஷ் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×