என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு.
- எடப்பாடி பழனிசாமிக்கு 5.5 அடி உயர வெள்ளிவேலை அ.தி.மு.க. தொண்டர்கள் வழங்கினர்.
மதுரை:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு, வலையங்குளத்தில் இன்று நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நேற்று முதலே மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து, மாநாடு புறப்படுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு 5.5 அடி உயர வெள்ளிவேலை சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் மற்றும் தொண்டர்கள் வழங்கினர். அ.தி.மு.க. மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாநாட்டு திடலுக்கு நூற்றுக்கணக்கான வாகன அணிவகுப்புடன் புறப்பட்டார்.
திடலை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி மாநாட்டின் முதல் நிகழ்வாக 51 அடி உயரம் கொண்ட கம்பத்தில், அ.தி.மு.க. கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து 10 நிமிடம் பூக்கள் தூவப்பட்டது.
Live Updates
- 20 Aug 2023 6:28 PM IST
நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் இயக்கம் என்றால் அ.தி.மு.கதான் என்றும் அறே மாதத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி என்றால் அதிமுகதான் என்று மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை.
- 20 Aug 2023 6:21 PM IST
மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' பட்டம் வழங்கப்பட்டது.
- 20 Aug 2023 6:19 PM IST
மதுரை வலையங்களத்தில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
- 20 Aug 2023 9:06 AM IST
சித்திரை திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு மதுரையில் இன்று நடைபெற்று வரும் அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
- 20 Aug 2023 8:53 AM IST
எடப்பாடி பழனிசாமி கொடியேற்றியபோது ஹெலிகாப்டர்கள் மூலம் 600 கிலோ பூக்கள் தூவப்பட்டது. கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.






