என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அச்சரப்பாக்கம் அருகே சென்னை வாலிபர் தீயில் கருகி பலி
    X

    அச்சரப்பாக்கம் அருகே சென்னை வாலிபர் தீயில் கருகி பலி

    • வீட்டில் சுரேஷ் குமார் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மதுராந்தகம்:

    சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 40). இவருக்கு திருமணமாகி மனைவி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். இதையடுத்து சுரேஷ்குமார் கடந்த 2 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தை அடுத்த சிறுபேர்பாண்டி அருகே அல்லனூர் கிராமத்தில் விவசாய வேலைகள் செய்து வருகிறார்.

    இதற்காக அங்கு குடிசை கட்டி வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் சுரேஷ் குமார் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்த ஒரத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர் வீட்டில் மின் இணைப்பு இல்லை. இதனால் தற்காலிகமாக ஜெனரேட்டர் கொண்டு மின்சாரத்தை பயன்படுத்தி வந்தார்.

    மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல கோணங்களில் ஒரத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×