என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் ஒரே நாளில் 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
- நடுவட்டம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த 26 வயது வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனா்.
- மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
குன்னூரை சேர்ந்தவர் காட்வின்(22). இவா் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
விடுமுறை நாட்களில் சொந்த ஊா் சென்று வந்த இவருக்கு, அதே பகுதியை சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது.
இதைத் தொடா்ந்து காட்வின் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் அந்த சிறுமி 7 மாதம் கா்ப்பம் அடைந்துள்ளார்.
சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இரு வீட்டு பெற்றோரும் கூடி பேசி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்துக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலா் பிரசன்ன தேவிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சமூக நலத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினா். மேலும் இதுகுறித்து குன்னூா் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காட்வினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.
ஊட்டி அருகே உள்ள புதுமந்து பகுதியை சோ்ந்தவா் ராஜன்(26). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதுபற்றி அறிந்த பெற்றோர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. நேற்று 17வயது சிறுமிக்கு திருமணம் நடப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரசன்ன தேவி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இருவீட்டு பெற்றோரிடமும் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.
மேலும் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின்னர் சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையும் வரை திருமணம் செய்யமாட்டோம் என ஒப்புதல் கடிதம் கொடுத்தனர்.
அதேபோல நடுவட்டம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த 26 வயது வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனா்.
மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்