என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் ஆன்லைன் மூலம் இளம்பெண் உட்பட 2 பேரிடம் ரூ. 29.50 லட்சம் மோசடி
    X

    ஓசூரில் ஆன்லைன் மூலம் இளம்பெண் உட்பட 2 பேரிடம் ரூ. 29.50 லட்சம் மோசடி

    • இன்ஸ்டாகிராமை தொடர்பு கொண்டு பின்பற்றினால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை சாலை நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் நாகராசன் இவரது மகன் ஜெயக்குமார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இன்ஸ்டாகிராமை தொடர்பு கொண்டு பின்பற்றினால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம். மேலும் இதில் பகுதி நேரமாக வேலை பார்த்தாலும் அதிக பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து அதில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டு ஜெயக்குமார் பேசியுள்ளார். அப்போது அதில் பேசிய மர்ம நபர் ஒரு்வர் வங்கி கணக்கை ஒன்றை கொடுத்து அதில் பணம் செலுத்த சொல்லியுள்ளார். அதன்படி ரூ. 14.50 லட்சம் பணத்தை வங்கி கணக்கில் ஜெயக்குமார் செலுத்தி உள்ளார். அதன் பிறகு அந்த சேல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    பின்னர் இதில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயக்குமார் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    அதே போன்று ஒசூர் ராயாக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் தேவி (வயது 26) இவர் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 15-ந் தேதி வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தியில் கூகுள் மேப்பில் ரேட்டிங் போடும் வேலையில் பணியாற்ற முதலீடு செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பி அதில் இருந்த செல்போன் எண்ணில் பேசிய தேவி பேசினார். அப்போது அவரிடம் பேசிய நபர் பணம் செலுத்த சொன்ன வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை.

    இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் நபர்கள் படித்தவர்களை தான் குறி வைக்கிறார்கள். அதில் படித்து விவரம் தெரிந்தவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இது போன்ற மோசடிகளில் சிக்கி கொள்கிறார்கள். செயலிகள் மற்றும் வாட்ஸ்ஆப்பில் வரும் குறுஞ்செய்திகளை பார்ப்பதையும் டவுன்லோடு செய்வதையும் செல்போன் பயன்படுத்துபவர்கள் தவிர்க்க வேண்டும் என்றனர்.

    கிருஷ்ணகிரியில் கடந்த 2 மாதங்களில் இதுபோன்று 5 சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

    Next Story
    ×