search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் அருகே சைவ உணவகத்தில் அசைவ உணவு கேட்டு போலீஸ்காரர்கள் மோதல்-கைகலப்பு
    X

    கோப்பு படம்

    தாம்பரம் அருகே சைவ உணவகத்தில் அசைவ உணவு கேட்டு போலீஸ்காரர்கள் மோதல்-கைகலப்பு

    • சைவ உணவகத்தில் தங்களுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
    • ஊழியர்கள் இது சைவ உணவகம். இங்கு அசைவம் கிடையாது என்று கூறியுள்ளனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியில் சைவ உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று இரவு தாம்பரம் ஆயுதப்படையை சேர்ந்த போலீசார் 2 பேர் சாதாரண உடையில் சாப்பிடுவதற்காக மது போதையில் சென்றதாக கூறப்படுகிறது.

    சைவ உணவகத்தில் தங்களுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் இது சைவ உணவகம். இங்கு அசைவம் கிடையாது என்று கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் தங்களுக்கு பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆயுதப்படை போலீசாருக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டனர், இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.

    Next Story
    ×