search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை
    X

    திட்டக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை

    • காலையில் எழுந்த பூங்கொடி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    திட்டக்குடி:

    திட்டக்குடி அடுத்த தொளார் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பூங்கொடி (வயது 35) 3 குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார். இவர்களுடன் வெங்கடேசனின் தந்தை முத்துவேலும் உள்ளார்.

    நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு அனைவரும் வழக்கம் போல தூங்கிவிட்டனர். காலையில் எழுந்த பூங்கொடி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், உள்ளே சென்று பீரோவை பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி கொலுசு, சுய உதவிக்குழு பணம் ரூ.45 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தை பார்த்து பூங்கொடி மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெண்ணாடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட ஓடுபோட்ட வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் நகை பெட்டிகள் இருப்பதை கண்டனர். மேலும், வீட்டை சுற்றிலும் அமைக்கப்பட்ட வேலியை பிரித்து உள்ளே வந்து சென்றதையும் கண்டறிந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், அதே ஊரில் பிள்ளையார்கோவில் தெருவில் வசிப்பவர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராமர். இவர் வீட்டின் பின்புற கதவு சேதப்படுத்தப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே நுழைய திருடர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால், கதவை உடைக்க முடியாததால், வீட்டிற்குள் செல்ல முடியாமல் கொள்ளையர்கள் திரும்ப சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

    தொளார் குடிகாடு கிராமத்தில் ஒரு வீட்டில் திருட்டு சம்பவம் நடத்ததும், மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×