search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு உதயமான தினம் கொண்டாட்டம்
    X

    பள்ளி தாளாளர் சாமிநாதன் மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள், இனிப்புகள் வழங்கினார்.

    தமிழ்நாடு உதயமான தினம் கொண்டாட்டம்

    • பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்தும் நின்றும் கொண்டாடினர்.
    • மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் இயங்கி வரும் குருஞானசம்பந்தர் மிஷன் வி.தி.பி. நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு உதயமான தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்தும் நின்றும் கொண்டாடினர். தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் செயலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். தலைமைஆசிரியர் தனராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×