என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு பெற்ற 220 மனுக்கள் மீது நடவடிக்கை
- காவல்துறை சார்பில் ஆயுதப்படை மண்டபத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
- முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட மனுக்கள், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது இந்த குறைதீர் கூட்டத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை மண்டபத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த மனுக்களை வாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட மனுக்கள், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது இந்த குறைதீர் கூட்டத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் புகார்தாரர் மற்றும் எதிர்புகார்தாரர் ஆகிய இருவரையும் அழைத்து சமரசம் செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
நேற்று நடைபெற்ற முகாமில் 220 மனுக்கள் விசாரிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
காலையில் திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் மாலையில் நாமக்கல், ராசிபுரம் என 4 உட்கோட்டத்திற்கு உட்பட்ட மனுக்கள் விசாரிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புகார் மனுக்கள் அனுப்பிய மனு தாரர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பல மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்ட நிலையில் சில மனுக்கள் தொடர் நடவடிக்கையில் இருப்பதால் அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






