search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டம்
    X

    கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசினார்.

    தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டம்

    • உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
    • குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசிய விபரங்கள் வருமாறு:-

    முத்துலட்சுமி (அ.தி.மு.க):

    கொளப்பாடு ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்பட்டு மணல்களை டிராக்டர்களில் ஏற்றி செல்லும் போது சாலைகளில் கொட்டுவதால் பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    அதனை சரி செய்ய வேண்டும்.

    ரம்யா (அ.தி.மு.க.): பண்ணத்தெரு ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.

    செல்வி சேவியர் (தி.மு.க.):

    நீர்முளை ஊராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. அதனை சரி செய்ய வேண்டும்.

    மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்):

    தலைஞாயிறு பகுதிக்கு காவிரிநீர் வராததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    தீபா (அ.தி.மு.க.):

    அவரிக்காடு ஊராட்சியில் மயான சாலைக்கு செல்லும் வழியில் ஆற்றில் உள்ள மரப்பாலத்தை அகற்றி கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும்.

    மாசிலாமணி (தி.மு.க.):

    வானவன்மகாதேவி பகுதியில் பிலாற்றங்கரை செல்லும் சாலையை செப்பணிட வேண்டும்.

    உதயகுமார் (தி.மு.க.):

    நாலுவேதபதி பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும்.

    இதற்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசுகையில்:-

    உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதிநி லைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.

    முடிவில் அலுவலக மேலாளர் மகேஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×