search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • நிலுவை தொகைகளை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.
    • 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    கும்பகோணம்:

    திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை அதற்கான வட்டியுடன் தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க. காசிநாதன் தலைமை தாங்கினார்.

    முருகேசன் முன்னிலை வகித்தார்.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், துணை தலைவர்கள் கணேசன், கலைமணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் கரும்பு விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×