search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

    • நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தர விட்டு உள்ளார்.
    • நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தர விட்டு உள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.

    மேலும் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன், நாமக்கல் மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராதா, பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கும் பணி இட மாற்றம் செய்யப்பட்டனர்.

    பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் பணி யாற்றி வந்த சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்கு மார், திருச்செங்கோடு மது விலக்கு பிரிவிற்கும், நாமக்கல் போலீஸ் நிலை யத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, வெப்படை போலீஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    ஆயில்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் நாமகிரிப்பேட்டைக்கும், மங்களபுரத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணி திம்ம நாயக்கன்பட்டிக்கும், ஜேடர்பாளையத்தில் பணி யாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியம் பரமத்திவே லூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×