என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவிலில் இன்று காலை தூய்மை பணியாளர்கள் 'திடீர்' சாலை மறியல்
- தூய்மை பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் டி.எஸ்.பி.சுதீர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சிக்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் சரியாக ஊதியம் வழங்க வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி சங்கரன் கோவில் மெயின் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியா ளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி.சுதீர் சாலை மறிய லில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இன்று காலை நடந்த இந்த திடீர் சாலை மறியலால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெருக்கடி யும் ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்