search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் வினியோகம் திடீர் தடை: ஐகோர்ட்டில் வழக்குகள் இருளில் விசாரணை
    X

    மின் வினியோகம் திடீர் தடை: ஐகோர்ட்டில் வழக்குகள் இருளில் விசாரணை

    • கோர்ட்டு சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிறிய அவசர விளக்கு வெளிச்சத்தில் நீதிபதி வழக்குகளை விசாரித்தார்.
    • என்.எல்.சி., போராட்டம் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டபோதும், இதுபோலத் தான் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். காலை 11.35 மணிக்கு மின்சார வினியோகம் அவரது கோர்ட்டு அறையில் திடீரென தடைப்பட்டது. இதனால் கோர்ட்டு அறை இருளில் மூழ்கியது. இதனால் கோர்ட்டு அறையின் கதவு திறந்து வைக்கப்பட்டது.

    மின்சாரம் இல்லாததால் ஏ.சி.யும் வேலை செய்யவில்லை.கோர்ட்டு சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிறிய அவசர விளக்கு வெளிச்சத்தில் நீதிபதி வழக்குகளை விசாரித்தார்.

    நீண்ட நேரம் மின்சாரம் வராததால் ஒரு கட்டத்தில், என் கோர்ட்டில் மட்டும்தான் மின்சாரம் இல்லையா? வேறு கோர்ட்டுகளில் உள்ளதா? வெளிநாட்டு சதி எதுவும் உள்ளதா? என்று நீதிபதி கிண்டலாக கேள்வியும் எழுப்பினார். கோர்ட்டு அதிகாரியும், வக்கீல்களும், "பல கோர்ட்டுகளில் மின்தடை ஏற்பட்டது. பின்னர், மின்சாரம் வந்துவிட்டது. ஆனால் உங்கள் கோர்ட்டில் மட்டும் மின்சாரம் தடைபட்டுள்ளது என்றனர்.

    இதை கேட்டு சிரித்துக்கொண்டு வியர்வையுடன் வழக்கை விசாரிக்க தொடங்கினார். சுமார் 12 மணியளவில் மின் வினியோகம் வழங்கப்பட்டது.

    ஏற்கனவே, என்.எல்.சி., போராட்டம் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டபோதும், இதுபோலத் தான் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், பல மணி நேரம், இருளில் வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×