search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் அடுத்தடுத்து 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    கொள்ளை நடந்த கடையை படத்தில் காணலாம்.

    பண்ருட்டியில் அடுத்தடுத்து 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

    • பண்ருட்டியில் அடுத்தடுத்து 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டது.
    • காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் பழக்கடை நடத்தி வருபவர் முத்து இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.கடையில் இருந்தகல்லாப்பெட்டி உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். இதே போல அருகில் இருந்த பால் கடை, மளிகை கடைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது மேலும்பண்ருட்டி அரசூர்ரோட்டில் மணி–நகரில் இருந்த ஸ்டூடியோ மருந்து கடை ஆகிய–வற்றில் பூட்டை உடைத்து விலை உயர்ந்த கேமரா கொள்ளையடித்து சென்ற–னர். இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்அறிந்ததும் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீ–சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடலூ–ரில் இருந்து கைரேகை நிபுணர்கள் தடை அறிவி–யல் நிபுணர்கள் வரவழைக் கப்பட்டனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த–னர். தொடர்ந்து தனிப்படை அமைத்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடிவருகின்றனர் இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×