search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியா் பணியிடத்திற்கு 4,500 போ் விண்ணப்பங்கள் சமா்ப்பிப்பு
    X

    நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியா் பணியிடத்திற்கு 4,500 போ் விண்ணப்பங்கள் சமா்ப்பிப்பு

    • காலியிட விபரங்கள் தொடா்பான பட்டியல் அந்தந்த மாவட்ட கல்வி அலு–வலகங்களில் பாா்வைக்கு வைக்கப்பட்டு–ள்ளன.
    • பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நேற்று என்பதால் மாவட்ட கல்வி அலுவலகங்களில், ஏராளமானோா் திரண்டனா்.

    நாமக்கல்:

    தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக முறையில் நிய–மனம் செய்யப்பட உள்ளது.

    காலியிட விபரங்கள் தொடா்பான பட்டியல் அந்தந்த மாவட்ட கல்வி அலு–வலகங்களில் பாா்வைக்கு வைக்கப்பட்டு–ள்ளன. மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் 71 பணியிடம், ஆசிரியா் 15 பணியிடம், முதுகலை ஆசிரியா் 14 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

    கடந்த 3 நாள்கள் நாமக்கல், திருச்செங்கோடு இரு கல்வி மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதியான விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் உரிய கல்வித் தகுதிச் சான்றிதழ் விவரங்களைத் தெரிவித்திருந்தனா். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நேற்று என்பதால் மாவட்ட கல்வி அலுவலகங்களில், ஏராளமானோா் திரண்டனா்.

    இதில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை தான் அதிகம் காணப்பட்டது. இரு கல்வி மாவட்டத்தில் சுமாா் 4,500 போ் விண்ணப்பங்களை சமா்ப்பித்தனா் என கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×