search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே மாணவனுக்கு முடி திருத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்
    X

    முடி வெட்டும் முன்பும், முடிவெட்டிய பின்னரும் மாணவனின் தோற்றத்தை படத்தில் காணலாம்.

    பண்ருட்டி அருகே மாணவனுக்கு முடி திருத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்

    • அரசு பள்ளிகளில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலுவின் சிறப்பான சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம், பண்ருட்டி டி.எஸ்.பி. பழனி ஆகியோர் உத்தரவின்படி பண்ருட்டி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி குற்ற பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், திருவதிகை பாவாடை பிள்ளை நகராட்சி உயர்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் விஷ்வா என்ற மாணவனுக்கு சிகை அலங்காரம் செய்து, அவனுக்கு நல்ல பல ஆலோசனைகளை கூறி படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலுவின் சிறப்பான சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×