search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவண்ணாரப்பேட்டையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
    X

    புதுவண்ணாரப்பேட்டையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய சிறுவன் உள்பட 2 பேர் கைது

    • புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் சரவணன்.
    • தப்பி ஓடிய வசந்த குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் சரவணன். இவர் நேற்று இரவு திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் ரோடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் 2 பேரை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரிந்தது. மேலும் தப்பி ஓடிய வசந்த குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×