என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு   கடலூரில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
    X

    பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு கடலூரில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

    • கல்லூரி மாணவ- மாணவிகள்பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • உதவி பேராசிரியர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை ஒரு வாரம் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி முதல் நாளான இன்று கடலூர் டவுன் ஹாலில் இருந்து கல்லூரி மாணவ- மாணவிகள்பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அன்பரசி, பெரியார் கலை கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன், தமிழ் துறை உதவி பேராசிரியர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கடலூர் அரசு தொழில் பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு, கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணி கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி அரசு தொழில் பயிற்சி நிலையம் வரை சென்று முடிவடைந்தது. இதில் அரசு தொழில் பயிற்சி கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வெங்கடாஜலபதி மற்றும் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×