என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை திருமணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை
    X

    முகாமில் தாட்கோ சார்பாக மானியத்துடன் கூடிய கடனுதவியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பயனாளிக்கு வழங்கினார்.

    குழந்தை திருமணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை

    • மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடந்தது.
    • இன்று 181 மனுக்கள் வந்துள்ளது. அதில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள மாரசந்திரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.

    இதில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை பெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள்.

    முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரு பகுதி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும், மற்றொரு பகுதி மலை கிராமங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. மலை பகுதிகளில் 50 குடும்பங்கள் இருந்தாலே அந்த பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    அதே போல, நமது மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தொழிற் சாலைகளில் பணியில் சேர்வதற்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியினை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது தனித் திறமையை வளர்த்துக் கொண்டு தமிழக அரசு மூலம் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு, பணி ஆணைகளை பெற்று பயனடைய வேண்டும்.

    குழந்தை திரு மணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாரச்சந்திரம் ஊராட்சியை சேர்ந்த பொதும க்களிடமிருந்து 81 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 38 மனுக்களுக்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளது. 9 மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ள நிலையில், 34 மனுக்கள் நிலுவையில் உள்ளது. மேலும், இன்று 181 மனுக்கள் வந்துள்ளது. அதில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் 133 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 45 ஆயிரத்து 702 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் உதவி கலெக்டர் சதீஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, வேளாண்மை துறை இணை இயக்குனர் முகமது அஸ்லம், தோட்ட கலை துறை இணை இயக்குனர் பூபதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், சமூக நல அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×