search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளத்தில் கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள் பொதுமக்கள் அச்சம்
    X

    கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள்.


    சாத்தான்குளத்தில் கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள் பொதுமக்கள் அச்சம்

    • சாத்தான்குளம் நகரில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. காலை, மாலை நேரங்களில் மெயின் பஜார் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
    • இதில் ஒரு நாய்க்கு கேன்சர் கட்டி உள்ளது. இந்த நாய் காலின் கீழே கேன்சர் கட்டியோடு மற்ற நாய்களோடு நகர் முழுவதும் சுற்றி திரிகிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் வியாபாரிகள் பள்ளி மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் நகரில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. காலை, மாலை நேரங்களில் மெயின் பஜார் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன.

    இதில் ஒரு நாய்க்கு கேன்சர் கட்டி உள்ளது. இந்த நாய் காலின் கீழே கேன்சர் கட்டியோடு மற்ற நாய்களோடு நகர் முழுவதும் சுற்றி திரிகிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் வியாபாரிகள் பள்ளி மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து சாத்தான் குளம் நகர வர்த்தக சங்க செயலாளர் செல்வராஜ் மதுரம், சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி உள்ளிட்டோருக்கு இந்த தெருநாய்கள் பிரச்சனையை கொண்டு சென்று கேன்சர் கட்டியுடன் சுற்றி தெரியும் இந்த தெருநாயை பிடித்து காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×