search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை
    X

    நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை நடந்தது.

    சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை

    • இந்த ஆண்டு முக்கோடி தெப்பத்திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 8-ம் நாள் விழாவான வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு விழா.

    சுவாமிமலை, டிச.30-

    108 திவ்ய தேசங்களில் 20-வது தலமாக விளங்குவது நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை பங்குனி பெருவிழா மற்றும் முக்கோடி தெப்ப திருவிழாவின் போது கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு முக்கோடி தெப்பத்திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் பெருமாள்- தாயார் வீதியுலா நடைபெறும். 4-ம் நாள் விழாவான நேற்று கல்கருடசேவை நடந்தது.

    மாலை கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து, இரவு கருடபகவான் மீது பெருமாளும், அன்னபட்சி வாகனத்தில் தாயாரும் சன்னதிக்குள் சென்றனர்.

    இதையடுத்து 8-ம் நாள் விழாவான வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பும், ஜன.3-ம் தேதி தெப்பத்திருவிழாவும், ஜன.5-ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×