search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு  ஸ்ரீ அம்பாள் வித்யாலயா  பள்ளி மாணவர்கள் தேர்வு
    X

    அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வான மாணவர்களை படத்தில் காணலாம்.

    அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேர்வு

    • அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி வருகிற 28-ந்தேதி கோவாவில் நடைபெற உள்ளது.
    • தேர்வு பெற்ற மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பாராட்டினர்.

    விளாத்திகுளம்:

    அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி வருகிற 28-ந்தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான வீரர்களை சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் தேர்வு செய்தார். இதில் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியை சேர்ந்த கிருத்திக் சர்வான், நளீன் கிரிஷ், ஹர்ஷத் ராஜ், சமர்ஜித், மிதுலா, ரவிசங்கர், பிரகதீஸ், சொகித், கிருஷ், ஆதேஷ், நவீன், டெனில்சன், தினேஷ் ஆகியோர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்ற மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தாளாளர் விமராஜ், செயலாளர் சுப்பா ரெட்டியார், இயக்குனர் இந்திரா ராமராஜூ, முதல்வர் ஆபிரகாம் வசந்தன், கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×