search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை எப்.எக்ஸ். கல்லூரியில் விளையாட்டு விழா
    X

    விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் பரிசு வழங்கினார்.

    நெல்லை எப்.எக்ஸ். கல்லூரியில் விளையாட்டு விழா

    • விளையாட்டு விழாவில் கைப்பந்து, கூடைபந்து, கபடி, கோகோ மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 2022-ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டி விழா நடந்தது.

    இதில் கைப்பந்து, கூடைபந்து, கபடி, கோகோ மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் மாணவர் அன்பு சிரஞ்சீவியும், பெண்கள் பிரிவில் மாணவி லிஸ்பாவும் 'தனிப்பட்ட சாம்பியன் ஷிப்' வென்றனர்.

    விழாவிற்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் நிர்வாக இயக்குநர் அருண்பாபு, பொதுமேலாளர்கள் (வளர்ச்சி) ஜெயக்குமார், (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், முதல்வர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

    ஏற்பாடுகளை வளாக மேலாளர் சகாரிய கேபிரியல் வழிகாட்டுதலின்படி உடற்கல்வி இயக்குநர்கள் சுரேஷ்குமார், சாமுவேல் அமர்நாத், நந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×