என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
17-ந் தேதி நடக்கிறது பழனியில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
- கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பழனி அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்படும் பேச்சு போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெறும்.
- ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கு பெற அனுமதி உண்டு.
பழனி:
பழனியில் அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வருகிற 17-ம் தேதி பேச்சு போட்டி நடைபெற உள்ளது.
கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பழனி அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்படும் பேச்சு போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு காமராசர் ஆற்றிய தொண்டு மற்றும் மக்கள் தலைவர் காமராசர், காமராசரின் சமுதாய பற்று, 9 முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சுதந்திரத்துக்கு முன்னும் சுதந்திரத்துக்கு பின்னும் தமிழகத்தின் கல்வி நிலை, உயர்கல்வியில் தமிழகத்தின் வளர்ச்சி, கல்வி வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பங்கு போன்ற தலைப்புகளில் பேசலாம்.
ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கு பெற அனுமதி உண்டு. விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளியின் மூலமாக பெயரை 13-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். 17-ம் தேதி காலை 10 மணிக்கு போட்டி தொடங்கும். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழும், வெற்றிப் பெற்றவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்