search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவாசாமி அக்ரஹார ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
    X

    சிறப்பு அலங்காரத்தில் பாவாசாமி அக்ரஹார ஆஞ்சநேயர்.

    பாவாசாமி அக்ரஹார ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

    • மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
    • சங்கல்பம் மேற்கொண்டு சுவாமிக்கு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    திருவையாறு:

    திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு நேற்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. குடும்ப நன்மைக்காகவும், பொருளாதார மேன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், தேச அமைதிக்காகவும், முன்னோர்களின் ஆசி வேண்டியும் சங்கல்பம் மேற்கொண்டு சுவாமிக்கு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

    Next Story
    ×