search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூரில்  பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    அன்னூரில் பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

    • புதிதாக வாகனங்களை வாங்குவோர் இந்த கோவிலில் பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
    • இந்த கோவிலில் வாகனங்களை நிறுத்தி வழிபட்டால் பயணம் எந்தவித தடங்களும் இன்றி சிறப்பாக இருக்கும்.

    அன்னூர்:

    அன்னூர் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றது காக்காபாளையம் மேடு உதயமரத்து கருப்பராயர் கோவில். அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் புதிதாக வாகனங்களை வாங்குவோர் இந்த கோவிலில் பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    அதேபோல தொலைதூரம் பயணிக்கும் கால் டாக்சிகள், கனரக வாகனங்களை இங்கு நிறுத்தி டிரைவர்கள் வழிபட்டுச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இங்கு வாகனங்களை நிறுத்தி வழிபட்டால் பயணம் எந்தவித தடங்களும் இன்றி சிறப்பாக இருக்கும் என்பது ஓட்டுநர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    இந்த நிலையில் ஆயுத பூஜை தினமான செவ்வாய்க்கிழமை மற்றும், விஜயதசமி தினமான நேற்று கருப்பராயர் கோவிலில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வாழைமரம் கட்டியும், விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து வாகன உரிமையாளர்கள் வழிபட்டனர்.

    அதேபோல வாகனங்களின் சாவிகளை கருப்பராயர் முன்வைத்து கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைத்து வழிபட்டனர். முன்னதாக கருப்பராயருக்கு மாலை அணிவித்து பொங்கல், சுண்டல், பொறி அவல், பழங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    Next Story
    ×