search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை ரேசன் அட்டை பெற சிறப்பு முகாம்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை ரேசன் அட்டை பெற சிறப்பு முகாம்

    • காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் முகாம் நடை பெறவுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாம்களில் கலந்துக் கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம்.

    திண்டுக்கல்:

    பொது விநியோக த்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.) வட்ட வழங்கல் அலுவல கங்களில் நாளை(9-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் முகாம் நடைபெ றவு ள்ளது.

    இந்த முகாம்களில் ரேசன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் அட்டை கோரியும், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், பொதுவிநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் ஆகியவை தொடர்பாக மனு அளிக்கலாம்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாம்களில் கலந்துக் கொண்டு மேற்காணும் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×