என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
    X

    ஓசூர் ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமை கலெக்டர் சரயு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் தொடங்கி வைத்து 78 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினர். அருகில் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா உள்பட பலர் உள்ளனர்.

    ஓசூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

    • முகாமில், அஞ்செட்டி தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் போன்ற மலைகிராம பகுதிகளி லிருந்தும், சூளகிரி, ஓசூர் பகுதிகளிலிருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
    • முகாமில் எலும்பு முறிவு, மனநல மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை மருத்துவம் போன்ற நோய்க ளுக்கான சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

    ஓசூர்,

    முன்னாள் முதல்வர் கருணா நிதியின் நூற் றாண்டை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளு க்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த இம்முகா மிற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். இந்த முகாமில், தகுதி வாய்ந்த 78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை களை, கலெக்டர் சரயு,ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தனர்.

    மேலும், 20 மாற்றுத்திறனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள், 2 பேருக்கு ரூ. 19,400- மதிப்பி லான சக்கர நாற்காலிகள் மற்றும் 3 பேருக்கு ரூ.6,600- மதிப்பி லான ஊன்று கோல்களை, கலெக்டர் சரயு, எம்.எல்.ஏ. ஒய்.பிர காஷ் ஆகியோர் வழங்கினர்.

    தொடர்ந்து, 18 வயது நிரம்பிய மாற்று திறனாளிகளை வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாமை, கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் சரயு கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஓசூரில் இன்று நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில், அஞ்செட்டி தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் போன்ற மலைகிராம பகுதிகளிலிருந்தும், சூளகிரி, ஓசூர் பகுதிகளிலிருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் எலும்பு முறிவு, மனநல மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை மருத்துவம் போன்ற நோய்க ளுக்கான சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

    மேலும் இதேபோன்ற, தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம், அடுத்த (செப்டம்பர்) மாதம் 2-ந் தேதி, கிருஷ்ணகிரியில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. எனவே, மாற்றுத்திறனா ளிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இந்த முகாமில், ஓசூர் மாநகராட்சி ஆணை யாளர் சினேகா, சப்- கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×