search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராம நவமியை முன்னிட்டு தருமபுரி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
    X

    ராம நவமியை முன்னிட்டு தருமபுரி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடந்தது.
    • சந்தன அபிஷேகம், பஞ்சாமிர்தம் மற்றும் தேன் அபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    தருமபுரி,

    ராம நவமியை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து தருமபுரி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு பால் அபிஷேகம், குங்குமம் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பஞ்சாமிர்தம் மற்றும் தேன் அபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    பின்னர் ஆஞ்சநேயருக்கு வடமாலை வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. ஆஞ்சநேயர் வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×