search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை
    X

    மாசி மாத கடைசி பவுர்ணமி முன்னிட்டு மாசாணி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

    • பரமத்திவேலூர் பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • சிறப்பு அலங்கா ரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் ஆகியோர்களுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பேட்டை மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×