என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை,தென்காசியில் தென்மேற்கு பருவக்காற்று வேகம் அதிகரிப்பு
- தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளது.
- நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக அதிக அளவு பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
நெல்லை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களான நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். இந்த ஆண்டு வழக்கம் போல் 2 மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவ காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையில் புழுதி அதிக அளவில் பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக நெல்லை, தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருவதால் அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவு பாதிப்படைந்து வருகின்றனர்.
நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக அதிக அளவு பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பேரிகார்டுகள் காற்றின் வேகம் காரணமாக அடிக்கடி சாலையில் சாய்ந்து விழுந்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்