search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்த சஷ்டி திருவிழாவையொட்டி நெல்லை முருகன் கோவில்களில் இன்று மாலை சூரசம்ஹாரம்

    • நெல்லையில் உள்ள முருகன் கோவில்கள் மற்றும் சிவன் ஆலயங்களில் உள்ள சண்முகர் சன்னதிகளிலும் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது.
    • 6-ம் நாளான இன்று முருகன் கோவில்களில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை:

    கந்த சஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நெல்லை

    இதை முன்னிட்டு நெல்லையில் உள்ள குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், சுவாமி நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஆறுமுகர் சன்னதி, பாளை மேலவாசல் முருகன் கோவில், பாளை திரிபுராந்திஸ்வரர் கோவில், நெல்லை சந்திப்பு சாலைகுமாரசுவாமி கோவில் உள்ளிட்ட மாநகரத்தில் உள்ள முருகன் கோவில்களிலும், மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்கள் மற்றும் சிவன் ஆலயங்களில் உள்ள சண்முகர் சன்னதிகளிலும் கந்த சஷ்டி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி கோவில்களில் தினமும் யாகசாலை பூஜைகள் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

    சூரசம்ஹாரம்

    திருவிழாவின் 6-ம் நாளான இன்று மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் காலை யாகசாலை பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபா ராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கந்த சஷ்டியை யொட்டி விரதம் மேற்கொண்டு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×