என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மாமியார் வீட்டிற்கு தீவைத்த மருமகன் கைது
- ஒரு மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள தனது சித்தி முத்தாள் வீட்டில் வசித்து வருகிறார்.
- இதில் வீட்டின் பகுதியளவு தீயினால் எரிந்து சாம்பலானது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தொரப்பாடி மாரியம்மன் கோவில் 11-வது வார்டை சேர்ந்தவர் ஜெகன்(30).பெயிண்டர். இவரது மனைவி அபிராமி. இவர் தனது கணவர் ஜெகனிடம் கோபித்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள தனது சித்தி முத்தாள் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 30 -ந் தேதி ஜெகன் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்தார். ஆனால் அபிராமி வரமறுத்தார். இதன் காரணமாக அசிங்கமாக திட்டி வீட்டை கொளுத்திவிடுவதாக கூறி கூரை வீட்டிற்கு தீவைத்து கொளுத்தினர். இதில் வீட்டின் பகுதியளவு தீயினால் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து மனைவி அபிராமி கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குபதிவு செய்து ஜெகனை கைது செய்தனர்.
Next Story






