என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் சிறு தானிய கண்காட்சி
- சிறுதானியத்தின் மகத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
- பொதுமக்கள், பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், அனைத்து அரிமா சங்கங்கள் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுதானிய திருவிழா கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு குத்து விளக்கேற்றி திறந்து வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர், அவர் கூறியதாவது:-
ஐ.நா.சபை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்ததை முன்னிட்டு சிறுதானியங்களின் பயன்பாடுகள் மற்றும் நன்மைகளை பொதுமக்களிடமும், இளைய தலைமுறையினரிடமும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிறுதானிய கண்காட்சி நடத்தப்படுகிறது.
சிறுதானியத்தின் மகத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நமது பாரம்பரியத்தை போற்றும் வகையில் நம் முன்னோர்கள் சிறுதானிய உணவுகையை உட்கொண்டு வந்தனர். கருவுற்ற தாய்மார்களும் இந்த உணவுகளை உட்கொண்டால் கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், வளர்ந்து வரும் சந்ததியினருக்கு பாரம்பரிய உணவு குறித்தும், அவற்றின் நன்மைகள் குறித்தும் எடுத்துக் கூறவேண்டும்.
பொதுமக்கள், பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும். வாழ்நாள் முழுவதும் சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
மேலும் இதில், மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் சப் - கலெக்டர் சரண்யா, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமண்டல மேலாளர் மோகன், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், பையூர் அறிவியல் ஆராய்ச்சி நிலைய தலைவர் சிவகுமார், ஓசூர் பி.எம்.சி.டெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.குமார், டாக்டர் சண்முகவேலு, அரிமா சங்க முன்னாள் கவர்னர் ரவிவர்மா மற்றும் ஞானசேகரன் ஒய்.வி.எஸ்.ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள், தாசில்தார் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






