என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மதுரை அருகே உள்ள வளையங்குளத்தில் பஸ்சுக்கு காத்திருந்த பெண் அரசு ஊழியரிடம் நகை பறித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருப்புவனம்:

    திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 48). இவர், வளையங்குளத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை வேலை முடிந்து, வீடு திரும்புவதற்காக விஜயலட்சுமி வளையங்குளத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள், திடீரென்று விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த டாலருடன் கூடிய 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

    இதுகுறித்து அவர், பெருங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    வளையங்குளம் பகுதியில் தனியே வரும் பெண்களை நோட்டமிட்டு இது போன்ற செயின் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாகவும், இங்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    வாக்குப்பெட்டியை சேதப்படுத்திய வழக்கில் 7 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
    சிவகங்கை:

    வாக்குப்பெட்டியை சேதப்படுத்திய வழக்கில் 7 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மானாமதுரை தாலுகா விளாக்குளம் பகுதியில் கடந்த 2006–ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின்போது அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பெட்டி சேதப் படுத்தப்பட்டது.

    இது தொடர்பாக அப்போதைய தேர்தல் அதிகாரி இளம்சூரியன், மானாமதுரை போலீசில் புகார் செய்தார். வேலுச்சாமி உள்பட 10 பேர் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர்.

    இது தொடர்பான வழக்கை சிவகங்கை நீதி மன்றம் விசாரித்து வந்தது. வழக்கு காலத்தில் 3 பேர் இறந்துவிட்ட நிலை யில் மீதம் உள்ள 7 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    சிங்கம்புணரி கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சிங்கம்புணரியில் சேவுக மூர்த்தி அய்யனார் திருக்கோவில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

    அதுபோல் இந்த வருடமும் கடந்த 15–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9–ம் நாள் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற் றது. முன்னதாக காலையில் சுவாமி சேவுகமூர்த்தி அய்யனார், பூர்ணா, புஸ்பகலா தேவிமார் களுடன் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர் நான்கு ரத வீதிகள் வழியாக தேர் சுற்றிவந்து கோவில் முன்வந்து நிலையை அடைந்தது.

    தேர் நிலையை அடைந்த தும் பக்தர்கள் மூடை, மூடையாக கொண்டு வந்த லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களை நிலைக்கல் லில் வீசி எறிந்து உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    ஒரே நேரத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய் உடைப்பதை பார்த்த பக்தர்களும், பொது மக்களும் மெய்சிலிர்த்தனர்.

    இப்பகுதியில் பெரிய கோவில் என அழைக்கப்படும் இந்த கோவில் தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அனைத்து மக்களின் ஒற்றுமையுடன் நடத்தப்படும் இந்த திரு விழாவுக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி கிராமத்தினர் செய்திருந்தனர்.

    சிவகங்கை அருகே போலீஸ் நிலையத்தை சூறையாடியவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த மதகுபட்டியில் மன்னர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், விழா நடத்தப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மதகுபட்டி போலீசார், விழா ஏற்பாட்டாளர்கள் 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். இவர்களை விடுவிக்கக்கோரி கிராம மக்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, கிராமத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அக்கம்பக்கத்து கிராமத்தினரும் அங்கு வரத்தொடங்கினர். இதனால் அங்கு கூட்டம் அதிகரித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் போலீசார் மீது கல்வீசினர். இதில் போலீசார் சிலர் காயம் அடைந்தனர். அவர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பகுதியினர் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். ஒரு அரசு பஸ் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.

    நிலைமையை சமாளிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதன்பின் கூட்டம் கலைந்து ஓடியது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மலர்விழி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயுதப்படை போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக 94 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்ற 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
    காரைக்குடியில் நகைக் கடையில் 10 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி மேல ஊரணி வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது65). இவர் காரைக்குடி அம்மன் சன்னதியில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவரது கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி நகை வாங்கப் போவதாக கூறி உள்ளார்.

    இதையடுத்து லட்சுமணனும் நகைகளை எடுத்து காண்பித்துள்ளார். அப்போது மர்ம ஆசாமி நகைகள் எதுவும் பிடிக்கவில்லை. வேறு மாடல்கள் இருந்தால் கொண்டு வாருங்கள் என்று கூறி உள்ளார். லட்சுமணனும் நகையை எடுக்க சென்றார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம ஆசாமி அங்கிருந்த 5 பவுன் கொண்ட தலா 2 செயின்களை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பினார்.

    இதுகுறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி தெற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.
    சிவகங்கை அருகே கல்வீச்சு மற்றும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை :

    சிவகங்கை அருகே கல்வீச்சு மற்றும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ளது கீழத்தெரு. இங்கு நேற்று பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு இரவில் மாணவ–மாணவி களுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல் மற்றும் ஆடல்–பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி களுக்கு போலீசாரிடம் அனுமதி வாங்கவில்லை என தெரிகிறது.

    இதுகுறித்து மதகுபட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டி மற்றும் போலீசார் கீழத்தெரு சென்று அனுமதி பெறாமல் விழா நடத்த வேண்டாம் என கூறி வந்தனர். ஆனால் இதனை மீறி இரவில் விழா நடத்தப்பட்டது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டி மற்றும் போலீசார் அங்கு சென்று விழா கமிட்டியினரை கண்டித்தார்களாம்.

    அப்போது தங்களது சாதியை குறைவாக சொல்லி சப்–இன்ஸ்பெக்டர் திட்டிய தாக அந்த சமுதாய மக் கள் குற்றம் சாட்டினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விழா ஏற்பாட்டாளர்கள் 10 பேர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இந்த சம்பவம் கீழத்தெரு மற்றும் அருகில் வசிக்கும் முத்தரையர் சமுதாய மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இரவு 10 மணி அளவில் திரண்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதனால் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் இருந்து போலீசார் மதகுபட்டி காவல் நிலையம் வரவழைக்கப்பட்டனர். அங்கு பதட்டமான சூழ் நிலை காணப்பட்டது. இருப் பினும் விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை விட போலீசார் மறுத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் இரவு 11 மணிக்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பரமக்குடி–சென்னை அரசு பஸ்சையும் அவர்கள் மறித்தனர். அதில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு விட்டு பஸ்சின் கண்ணாடி களை கல்வீசி உடைத்தனர்.

    இதனால் காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் கூடுதல் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட மக் களை கலைந்துபோக வலி யுறுத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கல் மற்றும் உருட்டுக் கட்டைகளை போலீசார் மீது வீசினர். இதனால் போலீசார் கூட்டத்தினரை கலைக்க தடியடி நடத்தினர்.

    இருப்பினும் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    அப்போதும் மறியலில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கற்களை வீசினர். இதில் போலீஸ் துணை சூப்பி ரண்டு பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள், இளையராஜா, செழியன், ஏட்டுகள் வீரபாண்டி, ஜெய ராஜ், போலீஸ்காரர்கள் அய்யப்பன், கருப்பையா, விஜய் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அதன் பிறகே கூட்டம் கலைந்து ஓடியது.

    இந்த கல்வீச்சு மற்றும் தடியடி சம்பவங்கள் காரண மாக அந்த பகுதி போர்க் களம்போல் காணப்பட்டது. சாலை முழுவதும் கற்களும், கட்டைகளும் கிடந்தன.

    மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் சேதம் அடைந்தன. கல்வீச்சில் காயம் அடைந்த போலீ சார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர் பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் விசாரணை மேற்கொண் டார். அப்போது இதுகுறித்து உறுதியான நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினார். இதனால் அங்கு சகஜநிலை திரும்பியது. இருப்பினும் அந்த பகுதி யில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீ சாரும் குவிக்கப்பட்டு பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
    மறியல் மற்றும் கல்வீச்சு தொடர்பாக 480 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    மதகுபட்டி:

    பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் போலீசார் 10 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனை கண்டித்து அந்த சமுதாயத்தினர் போலீஸ் நிலையம் முற்றுகை, சாலை மறியல், கல்வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். இது குறித்து மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி 480 பேர் வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், மதகுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன் உள்பட 60 பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் காரணமாக மதகுபட்டி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    மார்க்கெட் சென்ற பெண்ணிடம் முகமூடி மனிதர்கள் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை செப்ப வேளாலர்தெருவில் வசித்து வருபவர் மாரிமுத்து இரவது மனைவி மலர்கொடி(35). தற்பொழுது மாரிமுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று வாரச்சந்தைக்கு மலர்கொடி காய்கறி வாங்க சென்றார். சந்தைக்கு சென்று திரும்பி வீட்டின் அருகில் வரும்பொழுது எதிரே இருசக்கர வாகனத்தில் சுமார் 25–30 வயது மதிப்புள்ள இருநபர்கள் முகத்தை மறைத்து கர்சிப் கட்டிக் கொண்டு வந்தனர்.

    மலர்கொடி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றனர். ஆனால் மலர்கொடி செயினை கையில் பிடித்து கொண்டு கூச்சல் போட்டார். இருப்பினும் அந்த மர்ம நபர்கள் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார்கள்.

    இச்சம்பவம் குறித்து தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    காரைக்குடியில் காதல் பிரச்சினையில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 4 கல்லூரி மாணவர்களை போலீ சார் கைது செய்தனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்தவர் சிங்கதுரை. இவரது மகன் அருண் பாண்டியன் (வயது19). இவரது நண்பர் சுந்தர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    சுந்தர் காதலித்த பெண்ணையே, அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மணிகண்டன் (21) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் திருச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். காதல் பிரச்சினையில் சுந்தருக்கும், மணிகண்டனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தனது நண்பர்கள் பிரவீன் (21), கைலாஷ்குமார் (21), பாலசுரேசன் (19) ஆகியோரை அழைத்துக்கொண்டு சுந்தரை தாக்க சென்றார்.

    அப்போது சுந்தர் இல்லாததால் சம்பவ இடம் வந்த அவரது நண்பர் அருண்பாண்டியனை மணிகண்டன் உள்பட 4 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கல்லூரி மாணவர்களான பிரவீன், கைலாஷ்குமார், பாலசுரேசன் ஆகிய 4 பேரை கைது செய்தார்.

    காரைக்குடி அருகே சேவல் சண்டை நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே சேவல் சண்டை நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவண போஸ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். செங்கரைபள்ளி அருகே சென்றபோது 3 பேர் அங்கு தடை செய்யப்பட்ட சேவல் சண்டையை பந்தயம் வைத்து நடத்தி கொண்டு இருந்தனர்.

    அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பிஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேவல் சண்டை நடத்தியது பெத்தாட்சி குடியிருப்பை சேர்ந்த தவமணி பாண்டி (வயது39), கருப்பையா (40), தினேஷ்குமார் (20) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
    காரைக்குடி பகுதியில் கோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் 2 கோஷ்டியினர் மோதிக் கொண்டனர். இதில் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர்  ஈஸ்வரமூர்த்தி. இவர் முத்தாளம்மன் கோவிலுக்கு தனது நண்பர்களுடன் சாமி கும்பிட சென்றார். இதேபோல் சத்யா நகரைச் சேர்ந்த விஜி, செல்வம் ஆகியோர் தனது நண்பர்களுடன் அந்த கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஈஸ்வரமூர்த்தி, அவரது நண்பர்கள் தாக்கப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து ஈஸ்வரமூர்த்தி மேலும் சிலரைக் கூட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சத்யா நகருக்கு விஜி மற்றும் அவரது நண்பர்களைத் தேடி சென்றார். அங்கு அவர்கள் செல்வம் வீட்டிற்கு சென்று அவரை பற்றி விசாரித்துள்ளனர். அதற்கு செல்வத்தின் பாட்டி பத்மா அவன் எங்கு சென்றான் என்பது தெரியாது என தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் பத்மாவை தாக்கியதாக தெரிகிறது. பின்னர், அவர்கள் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தபோது விஜி மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை மறித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் காயமடைந்தனர். அவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர்.

    இதனைத்தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள்களையும் விஜி கோஷ்டியினர் அடித்து நொறுக்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று தலைமறைவாகினர். இந்த சம்பவம் குறித்து பத்மா அளித்த புகாரின் பேரில் கீழத்தெருவைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (வயது 19), ராமு (19), பரத்குமார் (19), சதீஷ்குமார் (19) ஆகிய 4 பேரை காரைக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணப்பன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    இதேபோல் ஈஸ்வரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் சத்யா நகரைச் சேர்ந்த விஜி, அஜித், மணி, செல்வம் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கோவில் திருவிழாவின் போது பெண்ணிடம் 20 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி கீழகாட்டு பகுதியை சேர்ந்தவர் சற்குணம். இவரது மனைவி விஜயா (வயது60). இவர் சிங்கம்புணரி சேவுகபெருமாள் அய்யனார் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு சென்றார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமி விஜயாவின் கழுத்தில் கிடந்த 20 பவுன் தாலி செயினை நைசாக அபேஸ் செய்து தப்பினார்.

    விழா முடிந்து விஜயா வெளியே வந்து பார்த்த போது நகை மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவரது கணவர் சற்குணம் சிங்கம்புணரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவனை தேடி வருகிறார்கள்.
    ×