search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இணையதள செயலிழப்பால் பணிகள் பாதிப்பு
    X

    இணையதள செயலிழப்பால் பணிகள் பாதிப்பு

    • சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் இணையதள செயலிழப்பால் பணிகள் பாதிப்படைந்தனர்.
    • இணையதள சர்வர் சரிவர இயங்காததால் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் சில தினங்களாக வரைபடப் பிரிவு, பிறப்பு-இறப்பு சான்றிதழ் பிரிவு, வரி வசூல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் இணையதள சர்வர் சரிவர இயங்காததால் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

    இதனால் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கேட்டு மனு செய்தவர்கள், வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கேட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளமாக பொதுமக்களிடம் புழங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர். பொதுமக்களின் தேவைகளை அறிந்து உடனடி தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×