search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை- கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
    X

    பள்ளத்தூரில் நவீன பேருந்து நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.

    அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை- கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு

    • அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆஷா அஜித் கூறினார்.
    • பால சுப்பிரமணியன் (பள்ளத்தூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் கண்மாய்கள் மற்றும் ஊரணிகள் சீரமைப்பு பணிகள், புதிய சாலைப்பணிகள், வளமீட்பு பூங்காக்களில் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை உள்ளிட்டவைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பகுதியில் வசிக்கும் பொது மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென மாவட்டத்தி லுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றி யங்கள் ஆகியவைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் துரிதமான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணி களுக்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.

    தொடர்ந்து கானாடு காத்தான், பள்ளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வை யிட்ட கலெக்டர் அதனை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர்கள் ராதிகா ராமச்சந்திரன் (கானாடு காத்தான்), சாந்தி சிவசங்கர் (பள்ளத்தூர்), உதவி செயற்பொறியாளர் ரெங்க ராஜ், உதவிப்பொறியாளர் அன்புச்செழியன், பேரூராட்சி செயல் அலுவ லர்கள் ரமேஷ்பாபு (கானாடு காத்தான்), பால சுப்பிரமணியன் (பள்ளத்தூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×