search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெறிநோய் தடுப்பூசி முகாம்
    X

    வெறிநோய் தடுப்பூசி முகாம்

    • இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி அழகுமணிகண்டன் தொடங்கி வைத்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கீழச்சீவல்பட்டியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி அழகுமணிகண்டன் தொடங்கி வைத்தார்.

    முகாமில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டு மாத்திரை வழங்கினர். இதில் காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம், சிவகங்கை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ராம்குமார், கால்நடை மருத்துவர்கள் பிரதீப், அருண், ஸ்ரீநாத், செல்வநாயகி, ரஞ்சிதா, கால்நடை அலுவலக ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவக் குழுவினரால் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×