search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டும்-நகர்மன்ற தலைவர் வலியுறுத்தல்
    X

    நகர்மன்ற கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது.

    நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டும்-நகர்மன்ற தலைவர் வலியுறுத்தல்

    • நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டும்.
    • தேவகோட்டை நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் வலியுறுத்தினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சியில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில், நகர் மன்ற துணைத்தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பேசுகை யில், நகராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்க அரசுக்கு நகர் மன்றம் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நகரில் டெங்கு பரவாமல் தடுக்க அதிகாரிகள் அனைவரும் தீவிர நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    அனிதா சஞ்சய் கவுன்சிலர் :- நகரில் ஒரு பகுதி கழிவுநீர் அனைத்தும் இரவுசேரி ஊரணியில் கலப்பதால் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டு வருகிறது. உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தலைவர் : ஊரணியில் பல ஆண்டு காலமாக நகரில் உள்ள கழிவுநீர் செல்கிறது அதனை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் உள்ள கழிவு நீர்கள் அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றிணைத்து அவற்றை மறுசுழற்சி செய்ய அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    துணைத் தலைவர் ரமேஷ் :- நகரில் உள்ள காலி இடங்களில் கருமேல மரம், மழைநீர் தேக்கம் மற்றும் குப்பைகள் இருந் தால் உரிமையாளர்களுக்கு முதலில் நகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்ட வேண்டும். இதனால் தொற்று நோய் பரவல் தடுக்க முடியும். 3,8,9 வார்டுகளில் குடிநீர் சரிவர வரவில்லை உடனே அதனை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தலைவர் : காலி யிடங்களில் உள்ள உரிமை யாளர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட வார்டுகளில் குடிநீர் சேவையை சரி செய்ய கூடுதல் போர்வல் போட நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.

    இதேபோல் கவுன் சிலர்கள் ஷேக் அப்துல்லா, கோமதி பெரியகருப்பு, சுதா, நீேராஜா சுந்தரலிங்கம், வடிவேல் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அதற்கு நகர் மன்ற தலைவர் பதலளித்தார்.

    Next Story
    ×