என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிகிச்சை செலவு தொகையை பெறுவதில் சிரமம்- ெதாடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு
- சிகிச்சை செலவு தொகையை பெறுவதில் சிரமம் இருப்பதாக ெதாடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டி உள்ளனர்.
- கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிவகங்கை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செய லாளர் முத்துப்பாண்டியன் முதல்-அமைச்சருக்கு மனு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணி புரியும் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வழங்குவதற்காக மாதந்தோறும் ரூ.300 அவர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்து வருகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021-ஐ செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 1.9.2021 முதல் எம்.டி. இந்தியா மற்றும் மெடி அசிஸ்ட் என்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் 3-ம் நபர் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனால் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் சிகிச்சை செலவுத் தொகையை திரும்பப் பெறுவது சிரமமாக உள்ளது. எனவே அரசா ணைக்கு முரண்பாடாக உள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது அரசு ஆணைப்படி சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும் வழங்குவதில்லை. மாறாக காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான மொத்தத் தொகையில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மட்டும் வழங்கி வருகிறது.
மீதி பணத்தை நோயாளி களைக் கட்டச் சொல்வது, அதிக கட்டணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களில் மருத்துவமனை நிர்வாகங்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சினைகள் குறித்து புகார் செய்தால் அதனை நிறுவனங்கள் கண்டு கொள்வதில்லை. மேலும் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகங்களிடமே பேசிக் கொள்ளுங்கள் என்றும் அலட்சியமாக கூறுகின்றனர். இதனால் சிகிச்சை பெறும் ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த நிலையில் தமிழக அரசின் உன்னதமான திட்டமான புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்