search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • கல்லல், சாக்கோட்டை, காரைக்குடியில் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • அலுவலர்களுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டிஅறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கல்லல், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    சிவகங்கை மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக கலெக்டர் தற்போது அனைத்து அலுவல கங்களிலும் ஆண்டாய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி கல்லல், சாக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த அலுவ லர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையில் உள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அலுவலகப் பணியா ளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்தும், இ-சேவை மையம், நிலஅளவை பிரிவு, வட்ட வழங்கள் பிரிவு ஆகிய பிரிவுகளிலும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    நிதிநிலை மற்றும் அலுவ லகங்களில் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

    வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, பகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டிஅறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, உதவி திட்ட அலுவலர்கள் சேகர் (கல்லல்), இளங்கோ (சாக்கோட்டை), காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமீனாள், செழியன் (கல்லல்), ஊர்காவலன், தவமணி (சாக்கோட்டை) உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர்.

    Next Story
    ×